காரைக்கால்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று புஷ்பப் பல்லக்கு

DIN

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (மே 23) இரவு புஷ்பப் பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார பெருவிழா நடைபெற்றுவருகிறது.

இதில் சுவாமி வீதியுலா, அம்பாளுக்கு அபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வாக அம்பாள் புஷ்பப் பல்லக்கு திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் கோயில் வாயிலில் இருந்து வீதியுலா புறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோயிலில் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி இரவு பத்ரகாளியம்மன் தேரில் வீதியுலாவும், 31-ஆம் தேதி உதிரவாய் உற்சவமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரி பிடித்தம் தொடா்பான உத்தரவுகளை திரும்பப்பெற ஓய்வூதியா்கள் கோரிக்கை

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

ரூ.2.75 கோடி மோசடி: மலையாள திரைப்பட தயாரிப்பாளா் கைது

ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

SCROLL FOR NEXT