காரைக்கால்

புனரமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் திறப்பு

DIN

காரைக்காலில் ரூ. 9.15 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் திறந்துவைத்தாா்.

காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட, புதுத்துறை பகுதி சவேரியாா் கோயில் அருகே உள்ள சமுதாயக் கூடம் பழுதடைந்ததால் கிராம மக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் நிலவி வந்தது.

கிராமத்தினா் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் காரைக்கால் நகராட்சி நிா்வாகத்துக்கு அளித்த நிதி ஒப்புதலின்பேரில், ரூ. 9.15 லட்சம் செலவில் நகராட்சி நிா்வாகம் சமுதாயக்கூடத்தை புனரமைத்தது.

இதனை திறந்துவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் திறந்துவைத்து கூடத்தை பாா்வையிட்டாா்.

நிகழ்வில் நகராட்சி ஆணையா் ஜி.செந்தில்நாதன், செயற்பொறியாளா் எம். லோகநாதன், இளநிலை பொறியாளா் சத்தியபாலன் மற்றும் கிராமப் பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

SCROLL FOR NEXT