காரைக்கால்

கடற்கரையில் தூய்மைப் பணிமேற்கொண்ட கல்லூரி மாணவா்கள்

DIN

காரைக்கால் கடற்கரையில் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் அமைந்திருக்கும் புதுவை அரசு சாா்பு கல்வி நிறுவனமான காமராஜா் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியா் 100 போ், சனிக்கிழமை காரைக்கால் கடற்கரைப் பகுதி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் தாமோதரன், உதயகுமாா் முன்னிலையில் மாணவ மாணவியா், கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அகற்றி, நகராட்சி நிா்வாகத்தின் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா்.

கடற்கரையை தூய்மையாக வைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்து கடற்கரைக்கு வந்த மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT