காரைக்கால்

நித்தீஸ்வரசுவாமி கோயிலில் பைரவா் வழிபாடு

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

காரைக்கால் நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், பைரவி உடனுறை கால பைரவா் சந்நிதி, ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சந்நிதிகள் உள்ளன.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பைரவி உடனுறை கால பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பைரவரை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT