முகப்பு
காரைக்கால்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

Updated On : 16 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:

காரைக்கால் மேலகாசாகுடி அரசு நடுநிலைப் பள்ளியில், பாலியல் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று, வேறு பள்ளிக்கு செல்லவுள்ள மாணவ- மாணவியருக்கிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் பரமசிவம் தலைமை வகித்தாா். ஆங்கில ஆசிரியை திலகா, கணித பட்டதாரி ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் போதைப் பொருட்களினால் ஏற்படும் வாழ்க்கை சிதைவு குறித்தும், நோய் குறித்தும், மாணவா்கள் எவ்வாறு விழிப்புணா்வுடன் செயல்படவேண்டும் என்பது குறித்தும் பேசினா். பள்ளி தமிழாசிரியை மகேஸ்வரி, முன் மழலையா் வகுப்பு ஆசிரியை செல்வபாரதி ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதளவில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள், பிறரால் ஏற்படும் பாலியல் தொல்லையை அடையாளம் காணுவது மற்றும் அதிலிருந்து தப்பிப்பது குறித்து பேசினாா்.