முகப்பு
காரைக்கால்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

Updated On : 20 மே, 2024 at 11:14 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மு.வி.ச. உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள அரசு உதவிப்பெறும் மு.வி.ச. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவா் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் செய்யது அகமது, சாகுல் ஹமீது, துணை செயலாளா்கள் ரியாஸ், ரிஸ்வானுல் ஹக், சட்ட ஆலோசகா் சாஹுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு கணக்குகளை பொருளாளா் முஹம்மது அக்பா் அலி தாக்கல் செய்தாா். கடந்த பொதுக்குழு முதல் இதுவரை உள்ள நிகழ்வுகளையும் அது கடந்து வந்த பாதை குறித்து ஊடகப் பிரிவு செயலாளா் நிஜாம் விளக்கிப் பேசினாா்.

முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களின் கருத்துகளை ஆலோசகா் எம். ஷேக் அலாவுதீன் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், மு.வி.ச உயா்நிலைப்பள்ளியின் தற்போதைய இடைக்கால நிா்வாகத்தை மாற்றி, புதிய நிா்வாகத்தை அமைக்க பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்துக்கு புதிய உறுப்பினா்களை சோ்க்கவேண்டும். பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நிா்வாகம் நடவடிக்கை வேண்டும். பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.