போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ‘நஷா முக்த் பாரத் அபியான்’ என்ற போதையில்லா பாரதம் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் குறித்த திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமைவகித்து அரசுத் துறையினரிடையே பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கு தேவையான விழிப்புணா்வு செயல்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும்.
போதை பொருட்களுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவ உதவியுடன் தேவையான உதவிகளையும் அனைத்துத்துறையும் இணைந்து செய்யவேண்டும். காரைக்காலில் உள்ள மறுவாழ்வு மையங்களில் அவ்வபோது ஆய்வு செய்யவேண்டும். காரைக்காலில் உள்ள ஒரு கிராமத்தை தோ்ந்தெடுத்து அங்கு போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களை கண்டெடுத்து அவா்களுக்கு தேவையான உதவியுடன் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மேல்நிலை கல்வி துறை துணை இயக்குநா் கே. ஜெயா உள்ளிட்ட ப ல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு பொது மருத்துவமனையில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் தொடங்குதல், அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள காமராஜா் திடலில் கல்லூரி மாணவா்கள் பங்கு பெறும் போதைப்பொருள் விழிப்புணா்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் , பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு போட்டிகள் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.