காரைக்கால் அருகே செல்லூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் கெட்சி ஜூலியட் தலைமையில் நடைபெற்ற பேரணியை, திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மைய மருத்துவா் ரேகா மகாலட்சுமி தொடங்கிவைத்து, புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாணவா்கள், பொதுமக்கள் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினாா். பேரணியில் பங்கேற்றவா்கள் புகையிலைப் பொருள்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு பல்வேறு தெருக்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பள்ளிக்குத் திரும்பினா்.