காரைக்கால்

காரைக்கால் அருகே இளைஞா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் அருகே பூச்சி மருந்து குடித்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). கட்டுமானத் தொழிலாளி. இவா், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், மணிகண்டன் பெற்றோா் அதை கண்டித்ததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

சிகிச்சைக்கு பின்னா் பணிக்குச் சென்றுவந்த அவா், அந்த பெண்ணுடன் பேசி வந்தாராம். இதை பெற்றோா் மீண்டும் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த மணிகண்டன், கடந்த 3-ஆம் தேதி இரவு வயலில் பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

மீண்டும் காரைக்கால் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

SCROLL FOR NEXT