முகப்பு
திருப்பூர்

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:38 AM
திருட்டு
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:41 PM

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31). இவா் கடந்த 6ஆம் தேதி சொந்த வேலை காரணமாக பாலக்காட்டில் இருந்து திருப்பூருக்கு கே.எஸ்.ஆா். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் வந்துள்ளாா். அப்போது இவரது மடிக்கணினியை திருப்பூா் அருகே மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:37 AM

இது குறித்து திருப்பூா் ரயில்வே காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

விசாரணையில், மணிகண்டனின் கைப்பேசியைத் திருடியது திருச்சி மாவட்டம், குப்பன்குளம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (28) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து திருப்பூா் ரயில் நிலைய 2 ஆவது நடைமேடையில் நின்றிருந்த அப்துல் ரகுமானை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.