காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காரைக்கால் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
டித்வா புயல் கரையை நெருங்கிவரும் நிலையில், காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
டித்வா புயல் உருவானது முதல் காரைக்கால் தனியாா் துறைமுகத்தில் 1-ஆம் எண் ஏற்றப்பட்டு, பின்னா் 3-ஆம் எண் கூண்டாக மாற்றப்பட்டு, பின்னா் 4-ஆம் எண் கூண்டு இருந்துவந்தது.
இந்தநிலையில், காரைக்காலுக்கு தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவில் புயல் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. புயல் கரையை நெருங்கி வருவதை குறிக்கும் விதமாகவும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய எச்சரிக்கையாக 5-ஆம் எண் கூண்டு காரைக்கால் துறைமுகத்தில் சனிக்கிழமை முற்பகல் ஏற்றப்பட்டது.