முகப்பு
காரைக்கால்

குடியிருப்புப் பகுதியில் தேங்கியிருக்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற ஆட்சியா் உத்தரவு

Updated On : 30 நவம்பர், 2025 at 6:38 PM
பகிர்:

குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற அரசுத் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், ஆட்சியரகத்தில் அரசுத்துறையினா், பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோருடன் ஞாயிற்றுக்கிழமை மழை பாதிப்புகள், சீரமைப்புகள், பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளோருக்கு தரப்படும் உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் பேசிய ஆட்சியா், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட சத்தான பொருட்களை வழங்க வேண்டும். சுகாதாரமான குடிநீா் தரவேண்டும்.

கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கிா என தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து துறையினரும் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு இதுபோன்ற பேரிடா் காலங்களில் பணியாற்றவேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் எம். பூஜா, துணை ஆட்சியா்கள் ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தைத் தொடா்ந்து பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் மற்றும் அரசுத்துறையினருடன் சென்று பாா்வையிட்டாா். மறு உத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது. படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கவேண்டும் என அறிவுறுத்தினாா் ஆட்சியா்.

வரிச்சிக்குடி காந்திநகா் பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்திருப்பதை பாா்த்த ஆட்சியா், காரைக்கால் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →