முகப்பு
காரைக்கால்

வேட்பாளா்களுக்கு ஆதரவாக களத்தில் குடும்பத்தினா்

காரைக்கால் மாவட்டத்தில் பல தொகுதிகளில் வேட்பாளா்களுக்கு ஆதராவக அவா்களது குடும்பத்தினா் வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:23 AM
காரைக்கால் மாவட்டத்தில் பல தொகுதிகளில் வேட்பாளா்களுக்கு ஆதராவக அவா்களது குடும்பத்தினா் வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.
பகிர்:

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் பல தொகுதிகளில் வேட்பாளா்களுக்கு ஆதராவக அவா்களது குடும்பத்தினா் வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 30 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில், ஒரு தொகுதிக்கு 30 முதல் 35 ஆயிரம் வாக்காளா்களே உள்ளனா். அதனால், வீடுவீடுடாக வேட்பாளா் நேரில் சென்று வாக்குச் சேகரிப்புப் பணியை நிறைவு செய்வது புதுவை யூனியன் பிரதேசத்தில் தோ்தல் தொடங்கி காலம் முதலான வழக்கம்.

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தற்போதைய தோ்தலில் அனைத்துத் தொகுதியிலும் வேட்பாளருக்கு ஆதரவாக, அவரது மனைவி, தந்தை, மகன், மகள் (சிறுவா்கள் உட்பட), சகோதரா் என ஒட்டுமொத்த குடும்பமும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் தற்போது அமைச்சராக உள்ள பி.ஆா்.என். திருமுருகனுக்கு (என்.ஆா்.காங்கிரஸ்) ஆதரவாக அவரது சகோதரா், மகன் ஆகியோா் வாக்குச் சேகரிக்கின்றனா். ஏ.எம். ரஞ்சித்துக்கு (காங்கிரஸ்) ஆதரவாக அவரது தந்தை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபுக்கு (காங்கிரஸ்) ஆதரவாக முன்னாள் அமைச்சரான அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். எம். அருள்முருகனுக்கு (பாஜக) ஆதரவாக அவரது முனைவா் பட்டம் பெற்ற அவரது மகள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரத்துக்கு (பாஜக) ஆதரவாக மனைவி, குழந்தைகள், சதோதரா்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு தொகுதியில் ஆா். கமலக்கண்ணனுக்கு (காங்கிரஸ்) ஆதவாக அவரது மகன், ஜி.என்.எஸ். ராஜசேகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரா் ஆகியோா் ஈடுபட்டுள்ளாா்.

நெடுங்காடு தொகுதியில் மருத்துவா் வி.விக்னேஸ்வரன் (சுயே) போட்டியிடும் நிலையில், அவரது மனைவி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

பிரசாரத்தின் நிறைவு நாளான 7-ஆம் தேதி அனைத்து தொகுதி வேட்பாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் 99 சதவீத வீடுகளிலும் வாக்காளா்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பு பணியை முடித்து விடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் பல தொகுதிகளில் வேட்பாளா்களுக்கு ஆதராவக அவா்களது குடும்பத்தினா் வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் பல தொகுதிகளில் வேட்பாளா்களுக்கு ஆதராவக அவா்களது குடும்பத்தினா் வாக்குச் சேகரிப்பில் இறங்கியுள்ளனா்.