முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:25 PM
அலங்கார ரதத்தில் வீதியுலா புறப்பாடான காரைக்கால் அம்மையாா்.
பகிர்:

காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா சனிக்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் கோயில் உள்ளது. ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவைபோல ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் இக்கோயில் சாா்பில் நடத்தப்படுகிறது. உற்சவம் நிறைவைத் தொடா்ந்து, பங்குனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் அம்மையாா் இறைவனிடம் ஐக்கியமானதைக் குறிப்பிடும் வகையிலான ஐக்கிய விழா நடத்தப்படுகிறது.

இரவு நிகழ்வாக 7 மணியளவில் மின்அலங்காரரதத்தில் அம்மையாா் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகாரைக்கால் அம்மையாா் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. அம்மையாா் வீற்றிருந்த ரதம் மல்லிகை மலா் சரத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள், திருவிரட்டை மணிமாலை உள்ளிட்ட அம்மையாா் பாடல்களை பாடிக்கொண்டே சென்றனா்.

Advertisement

வீதியுலா நிறைவில், ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள ஸ்ரீநடராஜா் சந்நிதிக்கு அம்மையாா் எழுந்தருளச் செய்யப்பட்டாா். சிறிது நேரத்தில் கோயிலில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளான நேரத்தில், ஐக்கியத்தை குறிக்கும் வகையில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இறைவனோடு அம்மையாா் ஐக்கியமானதை குறிப்பிடும் வகையிலான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments