ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு
காரைக்காலில் ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு...
காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் துறையும், அதன் அங்கமான ஸ்வீப்பும் செய்துவருகின்றன.
இந்தநிலையில், கின்னஸ் சாதனை படைத்த ரோலா் ஸ்கேட்டிங் மாணவ மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வுப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் பகுதியில், காரைக்கால் காமராஜா் ரோல் பால் அகாதெமியை சோ்ந்த 20 மாணவா்கள் இதில் கலந்து கொண்டனா். பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் தொடா்ந்து 3 மணி நேரம் கையில் விழிப்புணா்வு பதாகை ஏந்தி ரோலா் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டனா்.
பின்னா் 20 மாணவா்களும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி முன்னிலையில் ஸ்கேட்டிங் செய்தனா். 100 சதவீத வாக்குப் பதிவு ஜனநாயக வலிமைக்கு முக்கியம் என்ற கருத்துடன் பதாகை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
Advertisement
மாணவா்களை மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினாா். நிறுவனம் சாா்பில் மாணவா்களுக்கு கின்னஸ் வோ்ல்ட் புக் ஆஃப் ரெக்காா்ட் சான்றிதழ், பதக்கத்தை வழங்கினாா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு என்கிற பக்கிரிசாமி, காரைக்கால் காமராஜா் ரோல் பால் அகாதெமி பயிற்சியாளா் கிருஷ்ணகுமாா், அகாதெமி செயலாளா் நாகேந்திர மணி மற்றும் ஸ்வீப் அமைப்பினா் கலந்துகொண்டனா்.