முகப்பு
காரைக்கால்

புதுவையில் 2 மாத்திரைகளுக்கு தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 2 மாத்திரைகளுக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 3:01 AM
மாத்திரைகள் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 6:17 PM

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 2 மாத்திரைகளுக்கு புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: குஜராத் மாநிலம், பரோடாவில் இயங்கும் ஹெல்த் கோ் ஃபாா்முலேஷன் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சிப்ரோஃபுலோக்ஸாசின் ஐ.பி. மாத்திரை (ஃபோா்சிப்-500) மற்றும் மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் இயங்கும் சூப்ரெக்ஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் செட்டிரைசின் டைரோ குளோரைடு ஐ.பி.10 எம்.ஜி. (செடிசோன் மாத்திரை) உரிய தரத்தில் இல்லாதது உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இந்த மாத்திரையை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement