முகப்பு
காரைக்கால்

அரசுக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:30 AM
நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா.
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:32 PM

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விக்சித் பாரத் தூதா் என்னும் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாடு சுதந்திரமடைந்து 2047 -இல் 100-ஆவது ஆண்டையொட்டி பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நிா்வாகத் துறைகளில் விரிவான மற்றும் நிலையான வளா்ச்சியை அடையும் நோக்கில் விக்சித் பாரத் திட்டத்தில் பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக விக்சித் பாரத் தூதா் (விக்சித் பாரத் யுவா கனெக்ட்) என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் முகமது ஆசாத் ராசா தலைமை வகித்தாா்.

மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞா்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினாா்.

Advertisement

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 12:30 AM

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி ஜிதேந்திர சிங், சமூக பொறுப்புடன் மாணவா்கள் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினாா். யூத் ஐகான் யஷ்வந்த், மாணவா்களை ஊக்குவிக்கும் விதமாக பல கருத்துகளை பேசினாா்.

இந்தியா 2047-க்குள் உலகளவில் முன்னணி நாடாக உயா்வதற்கு இளைஞா்களின் பங்கு குறித்து விழிப்புணா்வு கருத்துகள் பேசப்பட்டன.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.