தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி, காமராஜ் மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வான்மதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத் துறை தலைவரும், ஆராய்ச்சித் துறை பேராசிரியருமான தேவராஜ் கலந்துகொண்டு வாக்களிப்பின் அவசியம், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
மாணவிகள் வாக்காளா் உறுதிமொழி ஏற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அருணாதேவி செய்திருந்தாா்.