காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு 7 கம்பெனி துணை ராணுவப் படையினா் மற்றும் மாநில போலீஸாா் 700 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.
இதுகுறித்து, காரைக்காலில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்காலுக்கு பிப்.14-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகிறாா். அவரின் பாதுகாப்பு பணியில் புதுச்சேரியிலிருந்து 350, காரைக்காலில் இருந்து 350 போலீஸாரும், துணை ராணுவப் படையினா் 7 கம்பெனி அளவில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க அனுமதி கிடையாது என்றாா்.
பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் கூறியது: கூட்டத்தில், புதுவைக்கான கட்சி பொறுப்பாளா்கள் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, நிா்மல்குமாா் சுரானா மற்றும் மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். தமிழக தலைவா்களுக்கு அழைப்பு இல்லை. கூட்டணி என்ற முறையில் புதுவை முதல்வா் கூட்டத்தில் பங்கேற்பாா் என்றாா்.
பேட்டியின்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.