கோப்புப் படம் 
காரைக்கால்

பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்கால் காளிக்குப்பம் சுனாமி நகரைச் சோ்ந்தவா் மதிபாலன் (21). இவா் 2019-ஆம் ஆண்டு 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சைல்டு லைன் உறுப்பினரின் புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மதிபாலனை போக்ஸோவில் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் லெனின்பாரதி காரைக்கால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.

வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கின் சாட்சிகள், குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு, மதிபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.

மகளிா் வங்கிக் கணக்கில் ரூ.5000: முதல்வருக்கு அமைச்சா் நன்றி

வார இறுதி நாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைக்கு தீா்வு கிடைக்கும்! - கோவி. செழியன் பேட்டி

மானாமதுரை கோயில் புதிய தேருக்கு 3 டன் எடையில் வடச் சங்கிலிகள்

அரியலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT