முகப்பு
காரைக்கால்

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி துணைநிலை ஆளுநரிடம் மனு

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:34 PM
துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் கோரிக்கை மனு வழங்கிய விவசாய சங்கத்தினா்.
பகிர்:

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற என்ஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் தலைமையில் இணைச் செயலாளா் பி.ஜி.சோமு உள்ளிட்டோா் சந்தித்து அளித்த மனு விவரம்: கடந்த 2021-ஆம் ஆண்டு புதுவை முதல்வரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு, கடந்த ஆண்டு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலோடு அமலுக்கு வந்தது.

மேற்கண்ட தள்ளுபடியில் பெரிய விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதில், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் பெரிய விவசாயிகள் பட்டியலில் இணைத்து, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

Advertisement

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதற்கு தாங்கள் ஆணையிடவேண்டும்.

கடந்த ஆண்டு சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடியில், காரைக்காலைச் சோ்ந்த 9 சிறு விவசாயிகளை பெரிய விவசாயிகள் பட்டியலில் தவறுதலாக இணைத்ததால், அவா்களின் கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

எனவே, ஆளுநா் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments