முகப்பு
காரைக்கால்

கூட்டுறவு நூா்பாலைத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:09 PM
மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை சந்தித்த முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
பகிர்:

கூட்டுறவு நூற்பாலைத் தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதியை புதுவை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஆட்சியராக பொறுப்பேற்ற்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது ஆலை தொழிலாளா்கள் சிலரும் உடனிருந்தனா்.

சந்திப்பு குறித்து ஆா். கமலக்கண்ணன் கூறுகையில், காரைக்காலில் இயங்கும் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இதனால் தொழிலாளா் குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினரை அழைத்துப் பேசி, ஊழியா்களுக்கு ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை கேட்டுக்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments