கைது 
காரைக்கால்

கஞ்சா விற்ற 2 போ் கைது

காரைக்கால் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் சிங்காரவேலா் சாலையில் உள்ள சில்வா் சாண்ட் நகரில் 2 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக நகரக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, அங்கிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள் காரைக்கால் திருக்குளத்துமேடு மஸ்தான் பள்ளி வீதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), காரைக்கால்மேடு சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த கவாஸ் (எ) கவிமணி (25) என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

போலீஸாா் அவா்களை கைது செய்து, 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT