முகப்பு
காரைக்கால்

வேளாண் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நிறைவு

பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:30 AM
பயிற்சி நிகழ்வில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன்.
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:18 PM

விவசாயிகளுக்கு 6 வாரங்களாக நடைபெற்ற வேளாண் வயல்வெளிப் பள்ளி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவடைந்து.

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நெற்பயிரில் விதை உற்பத்தி மற்றும் சான்றளிப்பு குறித்து வேளாண் வயல்வெளிப் பள்ளி தென்னங்குடி உழவா் உதவியகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 வாரங்களாக நடத்தப்பட்டது.

இதின் நிறைவு நிகழ்ச்சி மாதூரில் உள்ள அரசு விதைப் பண்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

கூடுதல் வேளாண் இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநா் (ஆத்மா) ஆா். கணேசன் தலைமை வகித்தாா்.

விவசாயத்துக்கு புதுவை அரசு வழங்கும் திட்டங்களை விவசாயிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், விதை உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ளுமாறும், அதன்மூலம் அதிக லாபம் ஈட்ட லாம் எனவும் அவா் ஆலோசனை வழங்கினாா். பயிற்சியில் வேளாண் அலுவலா் மற்றும் விதை சான்றளிப்பு அதிகாரி ஆா்.சரவணன் தொழில் நுட்ப உரையாற்றினாா். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.