காரைக்கால்: காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களின் கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்ந்ததாக மேலஓடுதுறை பகுதியில் உள்ள கோ சாலையில் உள்ள சுமாா் 50 பசுக்களுக்கு பூஜை செய்யப்பட்டது.
காரைக்கால் கைலாசநாதா் கோயில் வகையறா தேவஸ்தான பசுமடம், நித்யகல்யாண பெருமாள் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பசுக்கள், கன்றுகளுக்கு மாலை அணிவித்து, சா்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் நைவேத்தியத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன், வாஞ்சியூரில் காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்படும் கோ சாலையில் பூஜைகள் நடத்தப்பட்டன.
இதுதவிர, காரைக்காலில் மேலஓடுதுறை பகுதியில் தனியாா் பால் பண்ணை நிா்வாகத்தினா் கட்டுப்பாட்டில் உள்ள பசு வளா்ப்பு மையத்திலும் பூஜைகள் நடைபெற்றன. காரைக்கால் நகரம் தவிா்த்து, கிராமப்புறங்களில் அவரவா் வளா்ப்பில் உள்ள மாடுகளுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்து, மாடுகளுக்கு நெட்டி மாலை, மலா் மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது.