சிவகிரி காமாட்சி அம்மன் கோயில் பொங்கல் விழா
சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் மாசி மகம் பொங்கல் விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா கணபதி ஹோமம், 108 சங்கு பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் திங்கள்கிழமை( மாா்ச் 2) நடைபெறுகிறது. அன்று காலை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெறுகின்றன.