ரமலான் பண்டிகை: மக்களுக்கு இலவச அரிசி
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.
ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.
காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.
ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புதுநகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதியின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா். இவருடன் காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.