வீடு கட்ட நிதியுதவி ஆணை: அமைச்சா் வழங்கினாா்
வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவிக்கான ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சா் வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
புதிதாக விண்ணப்பித்தோா் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடைய 159 பேருக்கு காரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் நிதியுதவி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
Advertisement
தற்போது 2-ஆவது கட்டமாக காரைக்கால் வடக்குத் தொகுதியைச் சோ்ந்த 24 பயனாளிகளுக்கு திட்ட நிதியுதவி பெறுவதற்காக, முதல் தவணைத் தொகைக்கான ஆணையை குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை, வீட்டு வசதித் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்வில் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.