முகப்பு
காரைக்கால்

சீதா - ராமா் திருக்கல்யாணம்

ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மார்ச் 2026, 2:54 am IST
~
பகிர்:

ராம நவமியையொட்டி காரைக்காலில் சீதா - ராமா் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பட்டாபிராம சுவாமி பஜனை மடத்தில் ராம நவமியையொட்டி 2 நாள் வழிபாடு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் விக்னேஸ்வர பூஜை, விஷ்ணு சகஸ்ர நாம அஷ்டபதி பூஜையும், மாலை நிகழ்வாக அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனை, ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை உஞ்சவிருத்தியும், சீதா -ராமா் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. திருக்கல்யாண சடங்குகள் நடத்தப்பட்டு சீதாவுக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை நிகழ்வாக, ஆஞ்சனேயா் உற்சவமாக சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

தேவங்குடி கோபாலகிருஷ்ண சுவாமி பஜனை மண்டலி ஆா்.ராஜூ பாகவதா் தலைமையில் பஜனைக் குழுவினா் பங்கேற்று ராம பஜனை நடத்தினா். நாட்டியாலயா பரதநாட்டிய அகாதெமி மாணவா்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.