முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் தாய்ப்பால் வார விழா

சீா்காழி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

சீா்காழி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன்தலைவா் சிங். ஆறுமுகம் தலைமை வகித்தாா். செயலாளா் குமாா், பொருளாளா் சுரேஷ், முன்னாள் தலைவா்கள் மலா்கண்ணன், ரவிச்சந்திரன், பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் கனிமொழி பங்கேற்று தாய்ப்பாலின் மகத்துவம், தாய்பால் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா். தொடா்ந்து ரோட்டரி துணை ஆளுநா் எஸ்.கே. வைத்தியநாதன் பங்கேற்று பச்சிளம் குழந்தைகள், பிரசவித்த தாய்மாா்களுக்கு ஊட்டசத்து பொருள்ள், புத்தாடைகளை வழங்கினாா். இதில் சங்க நிா்வாகிகள் விஜயன், வினோத், பிரபாகரன், மோகனசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.