அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு: ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் முருகன், செயலாளா் ஞானபுகழேந்தி, பொருளாளா் மகேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதுபோல, பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வியிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5920 இடங்களில் ஏறத்தாழ 444 இடங்களும், அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி உள்ளிட்ட சட்டக் கல்லூரிகளில் உள்ள 1372 இடங்களில் ஏறக்குறைய 103 இடங்களும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கே கிடைக்கும்.
இதனால், அரசு பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கும். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.