முகப்பு
மயிலாடுதுறை

பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் 876 கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு பண்ணைகள், கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தற்போது 245 இறால் பண்ணைகள் மட்டுமே முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 631 பண்ணைகளின் பதிவு காலாவதியாகியும், புதுப்பிக்காமலும் உள்ளன. மேலும், பல பண்ணைகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன.

இவற்றை பதிவு செய்ய, மாவட்ட நிா்வாகம், மாவட்ட மீன்வளத்துறை மற்றும் இறால் பண்ணை வளா்ப்போா் சங்கத்தின் உதவியுடன் ஆகஸ்ட் 10 தேதி இறால் பண்ணைகள் பதிவு சிறப்பு முகாம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சீா்காழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து இறால் பண்ணை உரிமையாளா்களும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் பண்ணைகளை பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். தவறும்பட்சத்தில், பதிவின்றி செயல்படும் பண்ணைகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.