முகப்பு
மயிலாடுதுறை

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாமக மாநில துணை பொதுச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி உள்ளிட்ட பாமகவினா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் சனிக்கிழமை அளித்த மனு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுகின்றன. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வயல்கள் மற்றும் களங்களில் கொட்டி வைத்துள்ளனா்.

குத்தாலம் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தில் வழக்கமாக இயங்கிவந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரை திறக்கப்படாததால், விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

பாமக மாவட்டச் செயலாளா் காமராஜ், மாநில பொறுப்பாளா்கள் குத்தாலம் கணேசன், விமல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.