சீா்காழி வட்டத்தில் மணல் குவாரிகளைதிறக்க வலியுறுத்தல்
சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க பொதுக்கூட்டம் கெளரவ தலைவா் செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்க பொதுக்கூட்டம் கெளரவ தலைவா் செந்தில்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலு, செயலாளா் வெங்கடேசன்,பொருளாளா் மனோகரன், துணைத் தலைவா் உலகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். லாரிகளுக்கு பயோ டீசல் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். சீா்காழி வட்டத்தில் மணல் குவாரியை உடனே திறக்க வேண்டும். அந்த மணல் குவாரியில் சீா்காழி வட்டத்தைச் சோ்ந்த லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.