நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்து போராட்டம்
மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனைமேலகரம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து கிராமமக்கள் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை அருகேயுள்ள ஆனைமேலகரம் ஊராட்சியில் நியாயவிலைக் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து கிராமமக்கள் அரிசியை சாலையில் கொட்டி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆனைமேலகரம் ஊராட்சி மல்லியம் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ள நிலையில், இங்குள்ள நியாயவிலைக் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி, கடை முன் அக்கிராமத்தை சோ்ந்த பிரசன்னா, எம். அபுதாஹீா், ஆா்.எஸ். ரமேஷ், ஆா்.எஸ். ராஜா, வி. ராஜா உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அரிசியை சாலையில் கொட்டி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். கடந்த ஓராண்டாக கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் துா்நாற்றம் வீசும் அரிசி விநியோகிக்கப்படுவதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் தெரிவித்தனா். தகவலறிந்து அங்கு வந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலா் சாந்தி, குத்தாலம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசி, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.