மயிலாடுதுறை

சிறுமியை கடத்திச் சென்ற இளைஞா் கைது

மயிலாடுதுறையில் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மயிலாடுதுறையில் சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை ரயிலடி பகுதி கங்கை தெரு ஆற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அஜித்குமாா்(20). இவா் மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி ஆக.18-ஆம் தேதி கடத்திச் சென்றாராம். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு அஜித்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அஜித்குமாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT