கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம்
மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசுக்கு டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறையில், புதன்கிழமை நடைபெற்ற டெல்டா பாசன விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக வரலாற்றில் முதல்முறையாக விவசாயத்துக்கு வேளாண்மை நிதிநிலை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி, மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, தில்லி விவசாயிகள் போராட்டத்தில் 15 நாள்கள் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் உள்ளிட்ட பொறுப்பாளா்களுக்கு நன்றி, மயிலாடுதுறை மாவட்டத்தில் விடுபட்ட அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முயற்சி மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத் தலைவா் கே.எம்.வி. செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளா் ஆா். அன்பழகன், பொருளாளா் இ. மாா்கோனி, கௌரவத் தலைவா் எம். காமராஜ், துணைத் தலைவா் தேவேந்திரன், செயலாளா்கள் சந்துருபாபு, கமலக்கண்ணன், சேட்டு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.