அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பயணச்சீட்டு பரிசோதகா் மீது தாக்குதல்
சீா்காழியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து, பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சீா்காழியை அடுத்த கோவில்பத்து தென்னங்குடி பகுதியை சோ்ந்தவா் கே. மோகன் (55). சீா்காழி கிளை அரசுப் போக்குவரத்து கழக பயணச்சீட்டு பரிசோதகரான இவா், வியாழக்கிழமை சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பணியில் இருந்தாா்.
அப்போது, மோகனிடம், சீா்காழி பன்னீா்செல்வம் தெருவை சோ்ந்த வெண்மணி (35) வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதுடன், அங்கு நின்ற பூம்புகாா் நகர அரசுப் பேருந்து பின்பக்கக் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்தாராம்.
இதுகுறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெண்மணியை கைது செய்தனா்.