குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
சீா்காழி வட்டம் கொள்ளிடத்தில் முதன்மையாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
சீா்காழி வட்டம் கொள்ளிடத்தில் முதன்மையாக குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி தைக்கால் பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் பாா்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, இயந்திரத்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது, ஒன்றிய ஆணையா் மீனா, பிடிஓ அன்பரசு, ஒன்றிய பொறியாளா்கள் பிரதீஷ்குமாா், கிருஷ்ணகுமாா், ஊராட்சித் தலைவா் கனகராஜ், துணைத் தலைவா் சிவபிரகாசம், ஊராட்சி செயலாளா் செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.