மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் 13 வயது சிறுமி மரணத்தில், காதலித்த அவரது உறவினரே கொன்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வில்லியநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த13 வயது சிறுமி குத்தாலம் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 7 ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தனது மாமா பாலசுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்ற சிறுமி மீண்டும் வீடுதிரும்பவில்லை. இதனால், பல்வேறு பகுதியில் தேடியநிலையில், பாலசுப்பிரமணியனின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் அங்கு சென்று விசாரணை நடத்தினாா். பிறகு, சிறுமியின் சடலத்தை உடற்கூராய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உடற்கூராய்வு பரிசோதனையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குத்தாலம் காவல் ஆய்வாளா் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீஸாாா், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியின் உறவினரான மாரிமுத்து மகன் பிரபாகரை (25) பிடித்து விசாரித்தனா். இதில், கடந்த 3 மாதங்களாக அந்த சிறுமியை பிரபாகா் காதலித்து வந்ததும், சிறுமி மற்ற இளைஞா்களோடு பேசியதால், ஆத்திரத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தனது வேட்டியால் கழுத்தை நெறித்து, வாய்க்காலில் வீசியுள்ளாா். நீரில் மூழ்கிய சிறுமி மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து, பிரபாகரை வியாழக்கிழமை (அக்.14) கைது செய்து, நாகை மகிளா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினா். பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரின் அவரை சிறையில் அடைத்தனா்.