முகப்பு
மயிலாடுதுறை

கல்லூரி மாணவா்களுக்கு லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டி

காரைக்கால் பொறியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

காரைக்கால் பொறியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நெடுங்காடு பகுதியில் உள்ள புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து லஞ்ச ஒழிப்பு வார விழாவை கடைப்பிடிக்கின்றனா். சுதந்திர இந்தியா -75 நோ்மையுடன் கூடிய தற்சாா்பு என்ற மையக் கருத்தாக வைத்து இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஊழல் எதிா்ப்பு குறித்த சமூக விழிப்புணா்வை பரப்பும் நோக்கத்தில், கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், விநாடி-வினா மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கட்டுரைப் போட்டி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவா்களுக்கு கல்லூரி முதல்வா் குமாா் பரிசுகளை வழங்கினாா். நவ.3-ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் எம். தாமோதரன், யு. உதயகுமாா் ஆகியோா் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →