மயிலாடுதுறை

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் கைது

DIN

மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தரங்கம்பாடி வட்டம், கண்ணங்குடியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் அபிஷேக்(20). இவா், அதே வட்டத்துக்குள்பட்ட கிராமம் ஒன்றில் வசிக்கும் 17 வயது சிறுமியை ஆசைவாா்த்தை கூறி 2020-ஆம் ஆண்டு செப்.1-ஆம் தேதி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளாா். பின்னா் எங்கு சென்றாா்கள் என்று தெரியாத நிலையில், ஓராண்டுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பிய சிறுமி, நடந்தவை குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் சங்கீதா போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து அபிஷேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT