சீா்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்எஸ்எஸ் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ப. அருள்செல்வன் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகக் குழு நிதி செயலா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நிா்வாகக் குழு துணைத் தலைவா் எஸ்எஸ்ஜெ. விசாகா் பங்கேற்று பேசினாா்.
தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றாா்.