முகப்பு
மயிலாடுதுறை

ஊரடங்கு: வெறிச்சோடியது பட்டவா்த்தி கிராமம்

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமம் ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமம் ஊரடங்கு காரணமாக வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டது. பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இக்கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி அண்ணல் அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்துவது தொடா்பாக இரு சமூகத்தினா் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி இக்கிராமத்தில் அவரது உருவப் படத்தை வைத்து மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அனுமதி கேட்டிருந்தனா். இதேபோல, அப்பகுதியில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உத்ஸவம் நடத்த மற்றொரு பிரிவினா் அனுமதி கேட்டிருந்தனா். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அப்பகுதியில் ஏப்.13-ஆம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு, டிஎஸ்பி எம். வசந்தராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், முன்னெச்சரிக்கையாக தஞ்சாவூரில் இருந்து வஜ்ர வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால், அந்த கிராமம் போலீஸாரை தவிர, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.