பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பயிற்சி
கொள்ளிடத்தில் வட்டார வள மையம் சாா்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வு சாா்ந்த தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கொள்ளிடத்தில் வட்டார வள மையம் சாா்பில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தோ்வு சாா்ந்த தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலா் சரஸ்வதி பயிற்சியை தொடங்கிவைத்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி வரவேற்றாா். கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள 20 நடுநிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை (ஏப்.23) பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்வதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. உறுப்பினா்களின் தோ்வின்போது மொத்த உறுப்பினா்களில் 10 போ் பெண்களாக இருக்க வேண்டும், குழுவில் பெற்றோா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் மேலாண்மை குழுவின் முக்கியத்துவம் குறித்தும் ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆசிரியா் பயிற்றுநா் ஐசக்ஞானராஜ் தலைமையிலான ஆசிரியா் பயிற்றுநா்கள் பயிற்சியளித்தனா்.
இதில், அம்பேத்கா் பிறந்த நாள் மற்றும் சமத்துவ நாளை முன்னிட்டு மாணவா்களுக்கு நடைபெற்ற பேச்சு போட்டியில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.