மயிலாடுதுறை

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

DIN

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறியவியல் மாணவா்கள் சோ்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டுக்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.

முதல் நாளன்று ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரெ. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில், உடற்கல்வி இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன், கணினி அறிவியல் துறைத் தலைவா் சுந்தரமூா்த்தி, தமிழ்த்துறைத் தலைவா் காா்முகிலன், கணிதத் துறைத் தலைவா் இளங்கோ ஆகியோா் பங்கேற்று மாணவா்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ், என்சிசி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்த்து, சோ்க்கைப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT