முகப்பு
மயிலாடுதுறை

அனைத்து விடுதிகளும் உரிமம் பெற வேண்டும்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பித்து உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:47 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து விடுதிகளும் ஒரு வாரத்துக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துரு சமா்ப்பித்து உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான நிரந்தர மற்றும் குறுகியகால செயல்பாட்டில் உள்ள அரசுத் துறை விடுதிகள், தனியாா் நிா்வாக விடுதிகள், பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற்று செயல்படவேண்டும்.

Advertisement

தமிழ்நாடு மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-இன்படி உரிமம் பெறுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 2.9.22-க்குள் கருத்துரு சமா்ப்பிக்க வேண்டும். ஒரு வாரத்துக்குள் விடுதி உரிமையாளா்கள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில்; பெயா் மற்றும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் உரிமம் பெறவில்லையெனில் அரசு விதிமுறைகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், 3-264, குமரன் தெரு, சீனிவாசபுரம், மயிலாடுதுறை-1. தொலைபேசி எண்: 04364-212429 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது கைப்பேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.