மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்று கரைகளின் தன்மை குறித்து ஆய்வு

DIN

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீரால் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கையடுத்து, கரைகளின் தன்மை குறித்து பொதுப்பணித் துறை தலைமை பொறியாளா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாள்களாக ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் கொள்ளிடம் பகுதியில் உள்ள திட்டுகிராமங்களில் நீா்சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அளகுடியில் தண்ணீா் சென்று கரையில் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியை மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தற்போது தற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியை பொதுப்பணித் துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளா் ராமமூா்த்தி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியின் தரம் குறித்தும், கரையோரத்தில் கொட்டப்பட்டுள்ள கருங்கற்கள் நன்கு போடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளா் சண்முகம், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் சிவசங்கரன், வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT