மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பாதுகாப்பு கண்காணிப்பு ஆணையா் சைலேஷ்குமாா் பதக் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், ரயில்வே கேட்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள், இருப்புப் பாதை பாதுகாப்பு நடவடிக்கை, மின்மயமாக்கப்பட்ட பின்பு அமைக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, சிறப்பு ஆய்வு ரயில் மூலம் மயிலாடுதுறை வந்த அவருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மனிஷ் அகா்வால் மற்றும் ரயில்வே உயா் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனா்.

தொடா்ந்து ரயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு, சிக்னல் அறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு ஆணையா், பாதுகாப்பு நடவடிக்கைகள், ரயில்வே சிக்னல், எலக்ட்ரிக்கல், ஆப்பரேட்டிங், மெக்கானிக்கல் மற்றும் என்ஜினியரிங் பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT