கடற்கரை பந்தலில் காட்சியளிக்கும் பரிமள ரங்கநாதர் 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: பரிமள ரங்கநாதர் கோவிலில் மாசி மக விழா

மயிலாடுதுறை பரிமள ரங்கநாயகி சமேத பரிமள ரங்கநாதர் கோவிலில் மாசி மக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பூம்புகார்: மயிலாடுதுறை பரிமள ரங்கநாயகி சமேத பரிமள ரங்கநாதர் கோவில் உள்ளது. மாசி மகத்தை ஒட்டி செவ்வாய்க்கிழமை மாலை மேளம் முழங்கிட பக்தர்களால் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமதுரைக்கு புதன்கிழமை அதிகாலை பக்தர்களால் நடந்தே பல்லக்கில் கொண்டு வரப்பட்டார்.

பின்னர் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பரிமள ரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் மேளதாளம் முழங்கிட கடலில் தீர்த்தவாரி செய்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் நாராயணா நாராயணா என சரண கோஷமிட்டு கடலில் புனித நீராடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT